Thursday, October 22, 2015

Deltion Live Streaming

Monday, January 27, 2014

மீலாத் விழா - ஒரு பார்வை

மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 

ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

Wednesday, May 29, 2013

அறிவோம் ஆயிரம்- புளூடூத்! பெயருக்கு அர்த்தம் தெரியுமா???....

நாம் தினசரி கணிப்பொறி  மற்றும் மொபைல் போன்களில்  பயன்படுத்தும் புளூடூத் இதன் வரலாறு தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கு தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். "அதான் போன்ல இருக்குமே... பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே" எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு டவுட் வரும் பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்கனு கேட்பீங்க. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம். இதோ புளூடூத் என பெயர் வர காரணங்கள் இவைதான்....

  • பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது "இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்" அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள்.
  • புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு "B" தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் ! புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.
  • உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு
  • அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்." என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
  • புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது
  • ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
  • இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

  • தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் "இரட்டை எண்" இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். "ஒற்றை எண்" இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை ! பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் "ரவுண்ட் ராபின்" முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.
  • மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும்
  • புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது

    நன்றி: தட்ஸ்தமிழ் 

மீண்டும் முஸ்லிம்மலர்???..


                                                           
அஸ்ஸலாமு அலைக்கும் ,
                                                         நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் இந்த இணையதளத்தை கவனிக்க முடியவில்லை.மீண்டும் புதுப்பொலிவுடன் பலபல புதிய ஆக்கங்களுடன் உங்களை  சந்திக்க  எண்ணியுள்ளேன். விரைவில் புதிய புதிய ஆக்கங்களை இந்த இணையத்தில்  கண்டு மகிழலாம் இன்ஷா அல்லாஹ்.....  

Sunday, May 12, 2013

மீலாத் விழா ஒரு பார்வை ...


மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 


ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  



எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

Saturday, October 20, 2012

சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்


(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.
எனவே அந்த நாட்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீது அதாவது { லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ்} அதிகமாகக் கூறுங்கள் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)
எனவே அந்த நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும் இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீசுகளையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். 
இந்த சிறப்பான காலத்தில் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா  விடம் கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் அல்ல. 
'(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) . 
எனவே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.

Wednesday, October 17, 2012

26th oct-முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம்



சவூதி அரேபியாவின் அதி உயர் நீதிமன்றங்களின் சபையின் தீர்மானத்திற்கிணங்க ,இவ்வருட துல் ஹஜ் மாத முதல் தினம் , புதன் கிழமை , அக்டோபர் 17 உம் , அரபா தினம் 9 வது நாள் துல்ஹஜ் வியாழக்கிழமை , அக்டோபர் 25 ம் திகதி , முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம் 10 வது நாள் துல்ஹஜ் , வெள்ளிக்கிழமை , அக்டோபர் 26 ம் திகதியும் என , அகில இந்திய  ஸலப் கவுன்சில் அறிவித்துக் கொள்கிறது.

Saturday, September 29, 2012

பரவும் நோய்களுக்கு தீர்வு என்ன? என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி?......


 அதிரையில் தற்பொழுது பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரிலிருந்து உண்டாகும் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் நமதூரில் பல நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்கள் மற்றும் வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள  வேண்டும். இந்நிலையில் நமதூரை சேர்ந்த ஒரு பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எவ்வாறு இந்த காய்ச்சல் வந்திருக்க கூடும் கொசுக்களால் தானே. எனவே பேரூராட்சி தினமும் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமதூரில் நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் விரைவில் இது பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் வேண்டும். இதை அதிரை பேரூராட்சி செய்யுமா?...
பொறுத்து இருந்து பார்ப்போம்......     

Friday, September 21, 2012

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தற்காத்து நிற்க சிறந்த வழி அவரது ஸுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்று ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் ,
வலியுறுத்தினார். நபியவர்களின் பண்புகள் மற்றும் வாழ்க்கை வழி முறைகள் பரப்பப்பட்டதால் தான் இஸ்லாமியம் மதிப்புகள் பரவியது என்றும் கூறினார்.

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அ ப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.

இது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையோ இஸ்லாத்தையோ பாதிக்காது . ஏனெனில், நபியை யார் வெறுக்கிறாரோ அவர் தான் சந்ததி அற்றவர் ( இந்த உலகத்திலும் மறுமையில் இருந்தும் எல்லா நலவுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டவர். ) அத்தியாயம் 108, வசனம் 3) என்று அல்லாஹ் சுபஹானஹு தாலாஆ அல்குர் ஆனில் கூறி விட்டான்.

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகையில் இந்த குற்றவியல் முயற்சியை கண்டித்து முஸ்லிம்கள் அப்பாவி மக்களை கொலை செய்வதாலும் மற்றும் பொது சொத்து வசதிகளை தாக்குவதாலும் தங்கள் கோபத்தை முன்னிறுத்த அனுமதிக்க கூடாது.

மாற்றமாக முஸ்லிம்களின் செயல்பாடுகள் அல்குர் ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முஸ்லிம்கள் தங்கள் கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்றால், இந்த படத் தயாரிப்பாளர்கள் அவர்களின் இலக்குகளை அடைந்துக் கொள்வார்கள்.

அனைத்து நபிமார்கள் , ரசூல்மார்களை கேலி செய்யும் செயலை , சமூக விரோத செயல் என ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அனைத்து உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் . 

Monday, September 3, 2012

ஜனாஸா.........



மரணித்தவருக்காக நாம் செய்யவேண்டிய அனைத்தையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. 

 وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ  ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ

மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே. ( 50:19).
நோயாளியைத் தரிசிப்பது, உயிர் பிரியும் தருவாயிலுள்ளவருக்கு ஷஹாதாக் கலிமாவைச் சொல்லிக் கொடுப்பது, அவர் அவருடைய கண்களைக் கசக்கி மூடுவது , அவருடைய ஜனாஸாவை அவசரமாக அடக்கம் செய்வது, அவருடைய கடனை அடைப்பது, அவருடைய ஜனாஸாவை கபன் செய்வது நபிவழியாகும்.ஜனாஸாவை முத்தமிடவும் முடியும்.

மரணித்த ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுவது கடமையாகும். மரணித்தவரின் நெருங்கிய உறவினர்கள் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதே சிறந்ததாகும். கனவனை மனைவியும் மனைவியைக் கணவனும் குளிப்பாட்டலாம். 
நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ”அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம் போட்டோம்” என்று குறிப்பிடுகிறார். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா  நூல்:முஸ்லிம் .
நீரையும் இலந்தை மர இலைகளையயும் கொண்டு மூன்று அல்லது ஐந்து முறைகள் ஜனாஸாவைக் கழுகலாம் அதை விட அதிகமாகவும் கழுகலாம். நீர் ஊற்றுவதை ஒற்றைப் படையாகவும் , இறுதியாக வாசனையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கழுகும் போது வலதை முற்படுத்த வேண்டும். 

ஜனாஸாவை முழுமையாக மறைக்கும்படியாக அதனைக் கபன் செய்ய வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடையைத் தவிர வேறாடை எதுவுமில்லாவிட்டால் அணிந்திருந்த ஆடையைக் கொண்டேனும் அவரைக் கபன் செய்யவேண்டும். அளவு கடந்து விடாது கபனாடையை தேவையான அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஷஹீதாக மரணித்தவர் அவர் மரணிக்கும் போது அணிந்திருந்த உடையைக் கொண்டே கபன் செய்யப்படுவார். ஜனாஸாவிலும் கபன் துனியிலும் வாசனை பூசுவது ஆகுமாகும். 
குளிப்பாட்டி கபனிடுவதற்கு முன்னர் அவருடைய கையை தொழுவதற்கு தக்பீர் கட்டுவதைப்போன்று கட்டப்படுகிற இந்த நடைமுறை , மார்க்க ஆதாரம் இல்லாத செயல்களாகும். ஒரு மனிதன் மரணித்தால் அவனது இரு கைகளும் நீட்டியே வைக்கப்படும்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் சேதத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை. புஹாரி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு 

மையத்தை சந்தூக் என்ற பல்லக்கில் வைத்து , பச்சை துணியால் மூடி , பூக்களினால் அலங்கரித்து , பன்னீர் தெளித்துக் கொண்டு , சில களிமாக்களையும் ஓதிக் கொண்டு செல்வது நபி வழியல்ல. பித்அத் ஆகும். மௌனமாக ஜனாஸாவை நடந்து அவசரமாக செல்லவேண்டும். ஜனாஸாவோடு நடப்பது அதை சுமப்பது என்பன நபிவழியாகும். ஆதற்கு முன்னால் செல்வதும் பின்னால் செல்வதம் சமமே. 

”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரி: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. 

”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். புஹாரி அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு.

மையித்துக்காகத் தொழுவது கடமையாகும். தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். ஜனாஸா ஆணாகவிருந்தால் தலைப்பக்கமாகவும் பெண்ணாகவிருந்தால் ஜனாஸாவின் நடுப்பக்கமாகவும் தொழுகை நடாத்துபவர் நிற்கவேண்டும். நான்கு முதல் ஒன்பது தக்பீர் வரை கூறலாம். 

இமாம் வந்து தொழுகையை ஆரம்பிக்கும் முன்னர் மக்கள் சப்புகளில் நின்றுக்கொண்டு " குள் "  சூராக்களை ஓதிக்கொண்டிருப்பது நபி வழியல்ல. இன்னும் அது பித்அத் ஆகும். ஜனாஸா தொழுகையின் பின்னரோ ஜனாஸாவை அடக்கம் செய்த பின்னரோ கூட்டாக துவா செய்வதும் பித்அத் ஆகும். அத்தோடு அடக்கிய பின்னர் தல்கீன் என்று சிலவற்றை ஓதுவது, குடத்தால் தண்ணீர் ஊற்றுவது, மல்லிகைப் பூவினால் கப்ரை அலங்கரிப்பது , 
அடையாளம் என்ற பெயரில் மையத்தின் பெயர் , இறந்த திகதி போன்றவை குறிக்கப்பட்ட பலகைகளை நாட்டுவது, உயரமாக மண்ணை நிறைத்து கப்ரை உயர்த்துவது , வரசையாக நின்று கைலாகு செய்து சலவாத்து ஓதுவது என்பனவும் பித்அத்கல் ஆகும். இவைகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும். பெண் ஜனாசாவை திரையால் மறைத்துக் கொண்டு அடக்கம் செய்வதும் மற்றொரு பித்அத் ஆகும். கப்ரை ஒரு கல்லை கொண்டு அடையாள படுத்தலாம். 

ஜனாஸாவுக்காக ஓலமிட்டு அழுதல் நெருப்புப்பந்தங்களுடன், சந்தனக் குச்சிகளுடன் அதற்குப்பின்னால் செல்லுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல், ஜனாஸாவை சபித்தல் ஆகியன தடைசெய்யப்பட்டனவாகும். ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது ஆரம்பத்தில் ஆகுமாக்கப்பட்டு பின்னர் தடையாக மாற்றப்பட்ட சட்டமாகும். 

அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின்
சுயநலனுக்காகவோ , நல்ல காரியம் என்ற பெயரில் நல்ல நோக்கத்துடன் என்ற காரணத்துடன் அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.

‘ நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் ‘ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா , ஏழாம்ஃபாத்திஹா , நாற்பதாம் ஃபாத்திஹா , கத்தம் , வருட ஃபாத்திஹாக்கள் , இறந்தவருக்காக ஹல்கா , திக்ருகள் , ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் முஸ்லிம்களில் பலர்
செய்து வருகின்றனர். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும் , கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ , மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. 
இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். 

ஜஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த செய்தியை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்குஅறிவித்து விட்டு ‘ ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள் ‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்:அபூதாவூத் , அஹ்மத்
, திர்மிதி, இப்னுமாஜா 

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது என்று அறியலாம். 

Tuesday, August 14, 2012

ஜெயிலில் இருக்கும் கணவர் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்

ரம்லா, ஆக.14- 

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷபன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயிலில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந்து) கடத்தினார். 

பின்னர், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் செயற்கை கருவூட்டல் (டெஸ்ட்டியூப்) செய்து கொண்டார். அதை தொடர்ந்து கர்ப்பம் ஆன அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இக்குழந்தை பாலஸ்தீனத்தில் நப்லஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. இதை அறிந்த அம்மர் அல்ஷபன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தனக்கு மகன் பிறந்து இருப்பதாக சந்தோஷப்பட்டார். 

பலமுறை உயிரணுவை கடத்தி செயற்கை கருவூட்டல் தோல்வி அடைந்ததாகவும் பின்னர் வெற்றிபெற்று தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் கூறினார். 

இதுகுறித்து, பாலஸ்தீன சிறை கைதிகள் நலத்துறை துணை மந்திரி ஷியாத்அபுகன் கூறும்போது, பாலஸ்தீன சிறை கைதிகளுடன் அவர்களது மனைவிகள் செக்ஸ் உறவு கொள்ள இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்


மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2011-ம் ஆண்டு 6.25 சதவீதம் பேருக்கு மட்டும்தான் மலேரியா பரவி இருந்தது. 

இதேபோல் 2009-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் 37.19 சதவீதம் பேரை தாக்கியது. 2011-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 21.36 சதவீதமாக குறைந்தது. இந்த ஆய்வில் டெங்கு-மலேரியாவை பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டோரை மட்டுமே விரும்பி கடிப்பது தெரிய வந்துள்ளது. 

2011-ம் ஆண்டு மும்பையில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42.84 சதவீதம் பேர் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதேபோல் டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களில் 64.40 சதவீதம் பேர் இளம் வயதினர்தான். 

இதுபற்றி ஆய்வு நடத்திய டாக்டர் ஜிதிந்தர் பாட்டியா கூறும்போது, மும்பை நகரில் கொசுக்கள் மூலம்தான் அதிக அளவில் நோய்கள் பரவுகின்றன. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. இதன் காரணமாக 2009-ம் ஆண்டுக்கு பிறகு மலேரியா-டெங்கு காய்ச்சலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றன. 

என்றாலும் மலேரியா- டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரைத்தான் விரும்பி கடிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய ஆய்வில் இது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

Saturday, July 21, 2012

பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிப்பு



கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
 
அது 22 ஒளி வருடம் தூரத்தில் உள்ளது. இதற்கு 'கிளிசெ 581ஜி' என பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரியது. பூமிக்கு அருகில் உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும்.
 
இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது. அவை மேற்பரப்பில் உறைந்தும் கிரகத்திற்குள் பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் வோட் தெரிவித்துள்ளார்.

Night 2 Taraweeh - Makkah

1st Ten Rakah led by Sheikh Saud ash Shuraim


HD


2nd Ten Rakah led by Sheikh Maahir al Mu'ayqali





HD






Witr led by Sheikh Maahir al Mu'ayqali




videos:http://www.haramainrecordings.blogspot.in/

Monday, April 30, 2012

குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியா?... கொஞ்சம் பொறுமையா இருங்க-கலாம் பதில்!

டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, சற்று பொறுத்திருங்கள், பிறகு கேளுங்கள் சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், பாஜக தலைமையிலான கூட்டணியும் தங்களுக்குச் சாதகமானவர்களை குடியரசுத் தலைவராக்க தீவிரமாக உள்ளன.

ஒவ்வொரு தரப்பும் ஒருவரது பெயரைப் பரிந்துரைத்து ஆதரவு திரட்ட ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் தரப்பி்ல ஹமீத் அன்சாரியின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் ஆட்சேபனை நிலவுகிறது. ஏன், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரினமூல் காங்கிரஸே அதை ஏற்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்குப் பிடித்தவரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சிகள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்தான் அப்துல் கலாம். அவரது காலகட்டம் என்பது குடியரசுத் தலைவர் பதவியின் பொற்காலம் என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக, சுறுசுறுப்பாக, செயல்பட்டவர் கலாம். ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் ஓடி வந்தவர். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அத்தனை பேரும் தடுமாறினர் என்பதே உண்மை.

2007ல் இவரது பதவிக்காலம் முடிந்தபோது மீண்டும் கலாமையே குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமிக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் விரும்பின. ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் அதை விரும்பவில்லை. இதனால் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்கு வர நேரிட்டது.

தற்போது கலாம் பக்கம் பெரும்பாலான கட்சிகள் திரும்பி வருகின்றன. இதனால் காங்கிரஸுக்குப் பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. கலாம் மீது காங்கிரஸுக்கு உள்ள ஒரே அதிருப்தி என்னவென்றால், சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி செய்தவர் என்பதே. எனவே கலாமை மீண்டும் தேர்வு செய்ய அக்கட்சிக்கு பெரும் தயக்கம் காணப்படுகிறது.

ஆனால் கலாமையே தேர்வு செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட கட்சிகள் கூற ஆரம்பித்துள்ளதால் அவரே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கலாம் இதுவரை கருத்துக் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், டெல்லியில் அவரை செய்தியாளர்கள் முற்றுகையிட்டு மீண்டும் போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு கலாம், சற்றுப் பொறுத்திருங்கள், பிறகு கேளுங்கள், சொல்கிறேன் என்று மட்டும் கூறினார்.

ஆனால் இவரது இந்த பதிலிலேயே ஏகப்பட்ட பதில்கள் பொதிந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாம் நிச்சயம் போட்டியிடுவார் என்ற ஊகங்களும் வலுக்க ஆரம்பித்துள்ளன.

ராஷ்டிரபதி பவனில் மீண்டும் மக்கள் ஜனாதிபதி குடியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, April 26, 2012

அதிரை சின்ன சிங்கபூரா?... சின்னாபின்னமான சிங்கபூரா ?

அதிரையை  சின்ன சிங்கபூராக மாற்றுவேன் என்று தனது பதவி ஏற்பு மேடையில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் வாக்குறிதி அளித்தார்கள். அதன்படி அதிரை நகரில் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலமும் ப்ளெக்ஸ் மூலமும் விழிப்புணர்வு கொடுத்தார். இதன் முலம் அதிரையில் பிளாஸ்டிக் பைகளின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளது. மேலும் சுகாதாரத்தை சீர்படுத்த பணிகள் செய்தாலும் அதிரை சுகதரத்தில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

அதிரை ஆஸ்பத்திரித் தெருவில் திமுகவை சேர்ந்த மெம்பர் செயத் வீட்டின் எதிரே உள்ள ஒரு கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடை பல நாட்களாக நிரம்பி தெருவில் ஓடிகொண்டிருக்கிறது. இதற்கும் மேம்பரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் போலும். தன் வீடு எதிரே சுகாதார சீர்கேட்டை கண்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் போலும். இதனால் மக்கள் தெருக்களில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. பள்ளிக்கு தொழுக செல்லும் வழியில் வாகனங்கள் செல்லும் பொது அசுத்த நீர் ஆடைகளில் தெரிரிக்கிறது. இதன் மூலம் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இன்று காலை அதே தெருவில் உள்ள மற்றொரு சாக்கடையும் நிரம்பி ஓடுகிறது. இன்னும் சிறுது நேரத்தில் இரண்டு நதிகளும்(சாக்கடைகளும்)  சேர்ந்து தெருவிற்கு நறுமணமும் பல நோய்களும் வழங்க உள்ளது.

இச்சீர்கேட்டை என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி. தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடியாததற்கு அவர்கள் கட்சி உறுப்பினர்களே தடையாய் உள்ளனரே.  அதிரை பேரூராட்சி என்ன செய்ய போகிறது. அதிரைக்கு என்ன பெயர் வாங்கி தர போகிறது. சின்ன சிங்கபூரா? அல்லது சின்னாபின்னமான சிங்க பூரா?.......   

தேங்கி நிற்கும் சாக்கடை நீர் 

நிரம்பி வழியும் சாக்கடை 




புதுப்பள்ளிக்கு செல்லும் வழி




  நிரம்பி வழியும் மற்றொரு சாக்கடை 

படங்கள் : ஹசன் (முஸ்லிம்மலர்) 

Monday, April 23, 2012

உலகமே பாலஸ்தீனத்திற்காக வருந்துகிறது-ஆனால், அந்த நாட்டு அதிபரோ இலங்கையில்

கொழும்பு: இஸ்ரேலின் இனவெறித் தாக்குதலால் சிதிலமடைந்துள்ள பாலஸ்தீனத்தின் அதிபர், தமிழர்கள் மீது இனவெறியைக் காட்டி வரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், தனது 2 நாள் இலங்கை பயணத்தை இன்று தொடங்கினார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்குமாறு இலங்கையை கேட்டுக் கொள்வதற்காக அவர் வந்துள்ளார். நாளை அவர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகிறார். இலங்கையுடன் இரண்டு ஒப்பந்தங்களையும் பாலஸ்தீனம் செய்து கொள்ளவுள்ளது.

இஸ்ரேலின் இனவெறியிலிருந்தும், துவேஷத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் ஒரு பரிதாப தேசம் பாலஸ்தீனம். அதேபோலத்தான் சிங்களத்தின் இனவெறியிலிருந்தும், துவேஷத்திலிருந்தும் மீள முடியாமல் தவிக்கும் பிரதேசம் ஈழம். பாலஸ்தீனர்களும், தமிழர்களும் இஸ்ரேல் மற்றும் இலங்கையின் கையில் சிக்கி பட்ட துயரங்களும், அடைந்த இழப்புகளும் சொல்லில் வடிக்க முடியாதது.

இன்னும் சொல்லப் போனால் பாலஸ்தீனியர்களின் கஷ்டமும், ஈழத் தமிழர்கள் வடித்த ரத்தமும் ஒன்றுதான் என்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் இப்போதுதான் ஒரு இன அழிப்பை நடத்தி முடித்துள்ள இலங்கைக்கு பாலஸ்தீன அதிபர் வந்துள்ளது பலரையும் விழி விரியச் செய்துள்ளது.

பள்ளியின் நிலம் எங்கே? அதிரை மக்களின் கேள்விக்கு விடை கிடைக்குமா?.....

அதிராம்பட்டினம் சின்னப்பள்ளி என்ற‌ சித்தீக் பள்ளிவாசல் நிலம் பல கோடி மதிப்புள்ள, பல ஏக்கரை கொண்டது. அது, சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு,அபகரிக்கப்பட்டு பலருக்கு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு 1ஏக்கர்59 சென்ட்(1.59) நிலம் சொந்தம்! ஆனால், இப்போது பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் இருக்கும் இடமோ சொற்ப இடமே உள்ளது. அதாவது சென்ட் கணக்கில்தான் உள்ளது! எனும் போது மற்ற இடங்கள் எங்கே..? காணாமல் போக கையில் இருக்கும் பொருள் அல்லவே!
யாரால் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது?

வக்பு சொத்தை யாரும் வற்கவோ வாங்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை! இன்னும் சொன்னால், வக்பு சொத்தை யாரும் வாங்கி இருந்து, அதை எத்துனை வருடங்கள் அனுபோகம் காட்டிருந்தாலும் நம் நாட்டு சட்டப்படி அது பள்ளிவாசலுக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள்!


பள்ளியின் சொத்து இன்னும் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை!
சிலர் சொல்லுவதுபோல், இது வழி‍-சுவர் பிரச்சினையல்ல சொத்து பிரச்சினையாகும்!! ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்- சொத்து எப்போது எள்ளவும் இல்லாமல் மீட்கப்பட்டு பள்ளியின் கட்டுப்பாட்டிற்கு வருகிறதோ அப்போதுதான்,பள்ளியின் சொத்து பாதுகாகப்பட்டதாக கருதமுடியும்!

பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தின் வரைபடம்

பள்ளிவாசலுக்கு சொந்தமான நில உரிமை பட்டாக்கள்


இன்ஷா அல்லா வேறு புதிய தகவல்கள் விரைவில்....
நன்றி:அதிரை போஸ்ட்


Saturday, April 21, 2012

ஒராண்டு அதிமுக ஆட்சியில் மக்களின் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது: விஜய்காந்த்

கோவை: கடந்த ஒராண்டு அதிமுக ஆட்சியில் மக்களின் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலம் முடிந்துவிட்டாலும், அந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள விஜய்காந்த், தேமுதிக வென்ற 29 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து சட்டசபைக்கு வர விஜய்காந்துக்கு தைரியம் இல்லை என்று அதிமுக பேசி வருகிறது. இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த்,

சட்டசபைக்கு தைரியம் இருந்தால் வாருங்கள் என்று என்னை கேட்கிறார்கள். நான் தைரியம் இல்லாமலா சட்டசபைக்கு சென்று கொண்டிருந்தேன். இப்போது தைரியத்தோடு தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறேன்.

6 மாதத்துக்கு ஒரு முறை சட்டசபைக்கு வர வேண்டும் என்று விதி முறை. சட்டசபையில் யார் எது பேசினாலும் பேசக்கூடாது என்று உட்கார வைத்து விடுகிறார்கள். அப்படி இருக்கையில் சட்டசபைக்கு எதற்காக போக வேண்டும்?.

ஆளும்கட்சிக்காரர்கள் திட்டங்களை சொல்வார்கள். நாங்கள் எதிர்க்கட்சிகள் தவறுகளை சொல்வோம். செய்யும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சொல்லும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.

ஆனால், சட்டசபையில் எங்களை பேச விடாததால் நாங்கள் தொகுதி தொகுதியாக வருகிறோம். இதை நாங்கள் வீம்புக்கு செய்யவில்லை. இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும். இதுவரை எந்த தலைவராவது இப்படி தொகுதி தொகுதியாக குறை கேட்க வந்தார்களா? நான் வந்துள்ளேன். இது போன்ற தொலைநோக்கு எல்லா தலைவர்களுக்கும் வரட்டும்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றும் நிகழ்ச்சி இன்னும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடக்கும். சட்டசபையில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதன் தீர்ப்பு வரட்டும். நாங்கள் ஜெயித்த தொகுதிகளுக்கு மட்டுமே குறை கேட்க செல்வோம்.

இலங்கை சென்றுள்ள நாடாளுமன்றக் குழுவில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மட்டுமே உள்ளன. இலங்கைத் தமிழர்கள் மீது யார் பற்றோடு இருக்கிறார்களோ அவர்களை அனுப்புவதும் இல்லை. அவர்கள் போவதும் இல்லை.

கடந்த ஒராண்டு அதிமுக ஆட்சியில் மக்களின் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இடைத்தேர்தலில் மாற்றி ஓட்டு போட்டால் நம் தொகுதிக்கு எந்த வளர்ச்சி திட்டமும் கொண்டு வரமாட்டார்கள் என்பதால் மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

புதுக்கோட்டைக்கு இடைத்தேர்தல் வருகிறது என்று தெரிந்ததும் தான் அந்த நகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வழங்குகிறார்கள் என்றார் விஜயகாந்த்.

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163